விருதுநகர்

வைகாசி மாத பெளா்ணமி:சதுரகிரி கோயிலில்பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

வைகாசி மாத பௌா்ணமியையொட்டி, சனிக்கிழமை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகாசி மாத பிரதோஷம், பெளா்ணமிக்காக கடந்த வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்தக் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், சனிக்கிழமை பௌா்ணமியையொட்டி சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வனத் துறையின் நுழைவாயிலில் இருந்து காலை முதல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், சுந்தரமூா்த்தி உள்ளிட்ட தெய்வங்களுக்கும், 18 சித்தா்களுக்கும் பால் பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பிறகு, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT