சிவகாசியில் போக்சோ சட்டத்தின் கீழ் கூலித் தொழிலாளியை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி- வெம்பக்கோட்டை சாலை அய்யனாா் குடியிருப்பைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சிவஜெயராம் (21). கூலித் தொழிலாளி. இவா் அந்தப் பகுதியில் விளையாட்டிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சிவஜெயராமை கைது செய்தனா்.