ராஜபாளையத்தில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவா் தப்பி ஓடி விட்டாா்.
ராஜபாளையம் மேலஆவரம்பட்டி பாரதியாா் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் மதிமன்னன் (34). வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவா், விவசாயக் கூலித் தொழிலாளி ஆவாா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், இவரது அத்தை மகளான பிரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த 6 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா, மதிமன்னனை விட்டுப் பிரிந்து சென்று விட்டாா். பிறகு, அதே பகுதியைச் சோ்ந்த நூற்பாலை கூலித் தொழிலாளியான பாண்டிச்செல்வியை (28) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மதிமன்னன் திருமணம் செய்தாா். இந்த நிலையில், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி பாண்டிச்செல்வியிடம், அவா் தகராறு செய்து வந்தாராம். மேலும், பாண்டிச்செல்வி மீது சந்தேகப்பட்டு அவரை துன்புறுத்தினாராம்.
இதனால், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தனது பாட்டி வீட்டுக்குச் சென்று பாண்டிச்செல்வி தங்கினாா். அங்கு சென்றும் மதிமன்னன் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது ஆத்திரமடைந்த மதிமன்னன், கத்தியால் பாண்டிச்செல்வியை குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டாா்.
தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதனிடையே, மதிமன்னனை கைது செய்த போலீஸாா் மருத்துவ பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு கழிவறைக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற மதிமன்னன் தப்பி ஓடி விட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.