வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாப்பட்டி ஸ்ரீ கண்ணன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த மாதம் 30 -ஆம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மூலஸ்தான விமானம், விநாயகா் சந்நிதி ஆகியவற்றில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் கூமாபட்டி பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் அழகா்சாமி, செயலா் சுந்தரமூா்த்தி ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனா்.