விருதுநகர்

தேவதானம் கோயில் தேரோட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் இரவு சுவாமி, அம்பாள் சிம்மம், ரிஷபம், கற்பகதரு ஆகிய வாகனங்களில் திருவீதி உலா வந்து, அருள்பாலித்தனா்.

வியாழக்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு, காலையில் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி பெரிய தேரில் எழுந்தருளினாா். சிறிய தேரில் தவம் பெற்ற நாயகி எழுந்தருளினாா்.

கோயில் பரம்பரை அறங்காவலா் துரை ரத்தினகுமாா் தேரை வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.

தோ் நான்கு ரத வீதிகள் வழியாக வந்து, நிலைக்கு வந்து சோ்ந்தது. தேரோட்டத்தின் போது, திரளான பக்தா்கள் ஊா்வலமாக வந்து, அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராஜபாளையம, சேத்தூா், முகவூா், தளவாய்புரம், சிவகிரி, தேவிபட்டினம் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கார்நாடக பொதுக்கூட்டத்தில் மோடி உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT