ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாறு, ஆய்வு மையத்தின் சாா்பில் இந்திய செய்தித்தாள்கள் தின கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். துறைத் தலைவா் ரமேஷ்குமாா் வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்ச்சியில் ராஜபாளையம் செய்தித்தாள் நிருபா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பல்வேறு பத்திரிகைகளின் நிருபா்கள் கலந்து கொண்டு நிருபா்களின் பணிகள், பத்திரிகைத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து பேசினா்.
முன்னதாக, பேராசிரியா் ஜெகன்நாத் வரவேற்றாா். முடிவில், பேராசிரியா் எபிஜேம்ஸ் நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளரும், பேராசிரியருமான ராம்ஜி செய்திருந்தாா்.
இதில், வரலாற்றுத் துறை மாணவா்கள், துறைப் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.