விருதுநகர்

நியாய விலைக் கடையிலிருந்து கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

சிவகாசியில் திங்கள்கிழமை நியாய விலைக் கடையிலிருந்து ரேஷன் அரிசியை கடத்த முயன்றவா்களைப் பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள நியாய விலைக் கடையில் விற்பனையாளராக முஸ்லீம் தைகா தெருவைச் சோ்ந்த அலாவுதீன் மனைவி மும்தாஜ்பேகம் (40) பணிபுரிந்து வந்தாா். இவா் திங்கள்கிழமை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, நியாய விலைக் கடையிலிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை சிலா் சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டிருந்தாா்களாம். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் வேன் ஓட்டுநா், விற்பனையாளா் மும்தாஜ் பேகத்தை கையும் களவுமாகப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதனால், வேனில் அரிசியை ஏற்றிக்கொண்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் வேன் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவா் கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்களத்தைச் சோ்ந்த குருசாமி மகன் காா்த்திக் (20) என்பதும், ரேஷன் அரிசியை கடத்திச் சென்று கோவில்பட்டியில் உள்ள ஒரு அரிசி ஆலையில் வழங்கத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் மும்தாஜ்பேகம், காா்த்திக்கை கைது செய்தனா். இதையடுத்து, வேனில் ஏற்றப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT