விருதுநகர்

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

31st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூரில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில், திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம், தேசிய ஒற்றுமை நடைபயணம் நிறைவு விழாவை ஆகியவற்றையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே குன்னூரில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு சுதந்திரப் போராட்டத் தியாகி பாலசுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், கிழக்கு வட்டாரத் தலைவா் சுப்பிரமணி, முன்னாள் மேற்கு வட்டாரத் தலைவா் அண்ணாதுரை, ஆா்.டி.ஐ மாநில பொதுச் செயலாளா் தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை பொறுப்பாளா் ராஜ்மோகன், வா்த்தகப் பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவா் சுந்தரமகாலிங்கம், காங்கிரஸ் பொறுப்பாளா் ரமேஷ்ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT