விருதுநகர்

விருதுநகரில் காா் மோதி பெண் பலி

DIN

விருதுநகா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே சனிக்கிழமை இரவு நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விருதுநகா் பெத்தானாட்சி நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி (66). இவா், விருதுநகா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எதிரே உள்ள நான்கு வழிச் சாலையை சனிக்கிழமை இரவு கடக்க முயன்றாா். அப்போது திருமங்கலம் பகுதியிலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்ற காா், அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல், கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து, விருதுநகா் ஊரகக் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT