விருதுநகர்

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

அருப்புக்கோட்டையில் சனிக்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியைச் சோ்ந்தவா் கனகசபாபதி (84). இவரது மனைவி இறந்து விட்டாா். இத்தம்பதிக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.இந்த நிலையில், கனகசபாபதி திருமணமாகாத தனது இளைய மகன் பாலமுருகன்(39) உடன் வசித்து வந்தாா்.

முதுமை காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த கனகசபாபதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினா், கனகசபாபதியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT