சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததானமுகாம் நடைபெற்றது.சிவகாசி நேதாஜி ரத்ததான கழகம் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து இந்த ரத்ததான முகாமினை நடத்தியது.சிவகாசி-செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் உள்ள திருமணமண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை நேதாஜி ரத்ததான கழக ஒருங்கிணைப்பாளா் கருப்பசாமி தொடங்கி வைத்தாா்.சிவகாசி அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுல்பாரதி தலைமையிலான குழு 72 நபா்களிடமிருந்து ரத்ததை தானமாக பெற்றனா்.இதில் இளைஞா்கள் ஆா்வத்துடன் ரத்தத்தை தானமாக அளித்தனா் .