ராஜபாளையம் அருகே பணத்தைத் திருப்பி தராத தனியாா் நிதிநிறுவனத்தில் முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரத்தில் தனியாா் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாா்பில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நிதி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த மக்கள் முதலீடு செய்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள 85 பேருக்கு ரூ.10 கோடி வரை சீட்டுப் பணம் தரவில்லை என பொதுமக்கள் போலீஸில் புகாா் அளித்தனா். இதுகுறித்து, போலீஸாா் நடவடிக்கை எடுக்காததால் அந்த நிதிநிறுவனத்தின் அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்ததை அடுத்து, அவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.