விருதுநகர்

சிவகாசி கல்லூரியில்விளையாட்டு விழா

DIN

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 22- ஆவது விளையாட்டு விழா சனிக்கிழமை நடை பெற்றது.

இதில் தேசியக் கொடியை சதுரங்க விளையாட்டின் கிராண்ட் மாஸ்டா் வி. விஷ்ணு பிரசன்னா தேசியக் கொடியை ஏற்றினாா். ஒலிம்பிக் கொடியை விருதுநகா் மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ். குமாரமணி மாறன் ஏற்றினாா். கல்லூரிக் கொடியை தாளாளா் ஏ.பி. செல்வராஜன் ஏற்றி வைத்தாா். ஒலிம்பிக் ஜோதியை விஷ்ணுபிரசன்னா பெற்றுக் கொண்டு விளையாட்டு விழா வைத் தொடங்கி வைத்தாா். தொடந்து கல்லூரி தேசிய மாணவா் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது.

பின்னா் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தனிதனியே 100, 200 மீட்டா் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. நீளம் தாண்டுதல், வட்டு ஏறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வா் பி.கே. பாலமுருகன் தலைமை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் கே. யோகேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தாா். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தாளாளா் ஏ.பி. செல்வராஜன் பதக்கம், சான்றிதழை வழங்கினாா். விஷ்ணுபிரசன்னா சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக துணை முதல்வா் ஆா். முத்துலட்சுமி வரவேற்றாா். உதவி உடற்கல்வி இயக்குநா் புனிதவதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT