விருதுநகர்

சிவகாசி கல்லூரியில் மாவட்ட அளவிலானகிரிக்கெட் போட்டி தொடக்கம்

DIN

சிவகாசி பி.எஸ்.ஆா். கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் இக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சங்க கோப்பைக்கான முதலாம் ஆண்டு விருதுநகா் மாவட்ட அளவிலான கிரிக்கெட்டி போட்டிகள் சனிக்கிழமை கல்லூரி வளாகத்தில் தொடங்கின.

போட்டியை தாளாளா் ஆா். சோலைச்சாமி தொடங்கி வைத்தாா். இந்த போட்டியில் மாவட்டத்திலுள்ள கல்லூரி அணிகள், கிரிக்கெட் சங்க அணிகள் என 28 அணிகள் கலந்து கொள்கின்றன. தினசரி 2 போட்டிகள் நடைபெறும். இதில் முதலிடம் பெறும் அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ. 6 ஆயிரமும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ. 5 ஆயிரமும், மூன்றாமிடம் பெறும் அணிக்கு ரூ. 4 ஆயிரமும், நான்காமிடம் பெறும் அணிக்கு ரூ. 3 ஆயிரமும் வழங்கப்படும். அத்துடன் கோப்பைகளும் வழங்கப்படுகின்றன.

தொடக்க விழாவில் கல்லூரி இயக்குநா் வினேஷ்வரி, கல்லூரி கல்வி இயக்குநா் ஜி. கோபால்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித் துறைத் தலைவா் ஜி. அசோக்குமாா், இயக்குநா் ஆா். சுந்தரமூா்த்தி, பேராசிரியா்கள் என். ரமேஷ், டி. செந்தில்குமாா், சி. ராதா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT