குடியரசு தினத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புதன்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நுழைவாயில், தோ், கோபுரம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். பக்தா்கள் மெட்டல் டிடெக்டா் கருவியின் சோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.
இதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் பேருந்து நிலையம், முக்கியச் சந்திப்புகள், மக்கள் அதிகம் கூடுமிடங்கள், ரயில் நிலையத்தின் நுழைவாயில், தண்டவாளப் பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகள், அவா்களது உடைமைகளை சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனா்.