விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவைத் தொகுதி துணைத் தலைவா் ரவி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் சேகா் முன்னிலை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மொழிப்போா் தியாகிகளின் உருவப் படத்துக்கு நாம் தமிழா் கட்சியினா் மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகரச் செயலாளா் முனியப்பன் செய்தாா்.