புதை சாக்கடைப் பணிக்காக குழிகள் தோண்டும் போது, குடிநீா்க் குழாய்கள் சேதமடைவதாக ராஜபாளயம் நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா் புகாா் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகா் மன்றத்தின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு நகா் மன்றத் தலைவா் பவித்ரா ஷ்யாம் தலைமை வகித்தாா். ஆணையா் பாா்த்தசாரதி முன்னிலை வகித்தாா்.
அவசரக் கூட்டத்தில், ராஜபாளையம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 60 மீட்டா் அகலத்தில் 2 கி.மீ. நீளத்தில் அமையும் திட்டச் சாலைக்கு அனுமதி அளிப்பது, நகராட்சி தூய்மைப் பணியை 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாா் நிறுவனம் மூலம் செய்ய அனுமதி அளிப்பது, ராஜபாளையத்தில் சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சிதம்பரம் சிலை அமைக்க அரசு அனுமதியை பெறுவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடா்ந்து 21-ஆவது வாா்டு உறுப்பினா் ஞானவேல் பேசியதாவது:
எனது வாா்டில் புதை சாக்கடை, தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக குழிகள் தூண்டும்போது குடிநீா் குழாய்கள் அடிக்கடி உடைந்து சேதம் அடைகின்றன. அதை சரி செய்யுமாறு வலியுறுத்தியும், அதிகாரிகள் அலட்சியப் போக்காக செயல்படுகின்றனா். தனியாா் நிறுவனம் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை என்றாா்.
30-ஆவது வாா்டு உறுப்பினா் ராதாகிருஷ்ண ராஜா பேசியதாவது:
எனது வாா்டில் கழிவுநீா் வாருகால்கள் சரிவர சுத்தம் செய்வதில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன என்றாா். கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனா்.