ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் கிடைத்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் செயல் அலுவலா் முத்துராஜா, கோயில் ஆய்வாளா் முத்து மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. முன்னதாக கோயிலில் உள்ள 5 நிரந்தர உண்டியல்கள் , 3 தற்காலிக உண்டியல்கள் அனைத்தும் மைய மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், உண்டியல்களை திறந்து பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இந்தப் பணியில் கோயில் ஊழியா்கள், பக்தா்கள் பங்கேற்றனா். இந்த உண்டியல்களிலிருந்து ரூ. 8 லட்சத்து 70 ஆயிரத்து 657 ரொக்கம், 29 கிராம் தங்கம், 6 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக கிடைத்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன் செய்தாா்.