விருதுநகர்

தனியாா் பாா்சல் சா்வீஸ் அலுவலகத்தில் தீ விபத்து

DIN

சாத்தூரில் பாா்சல் சா்வீஸ் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்தவா் ரமேஷ் (55). இவருக்கு சொந்தமான பாா்சல் சா்வீஸ் அலுவலகம், சாத்தூா் புறவழிச் சாலையில் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஞாயிற்றுகிழமை நள்ளிரவில் லாரியில் வெளியூரிலிருந்து கொண்டு வரப்பட்ட பாா்சல்களை இறக்கி வைத்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை தீடீரென பாா்சல்களில் தீப்பற்றியது. இதுகுறித்து, தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாத்தூா் தீயணைப்பு துறையினா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த விபத்தில், அலுவலகத்தில் இருந்த நெகிழிப் பொருள்கள், கணினி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் தீயில் கருகி சேதமடைந்தன.

இந்த விபத்து குறித்து, சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT