விருதுநகர்

கம்பன் கழக அறக்கட்டளை 43-ஆம் ஆண்டு விழா

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கம்பன் கழக அறக்கட்டளையின் 43-ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கம்பன் கழகத் தலைவா் விஜயராகவராஜா தலைமை வகித்தாா். அறங்காவலா் சங்கர சீத்தாராமன் முன்னிலை வகித்தாா். துணைத்தலைவா் கோபால்சாமி வரவேற்றாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வி.ப.ஜெயசீலன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவைத் தொடக்கி வைத்தாா்.

இந்த விழாவில், வழக்குரைஞா் ராமலிங்கம் ‘பழிக்கு நாணியவன்’ என்ற தலைப்பிலும், பேராசிரியா் பா்வீன் சுல்தானா ‘மந்திரச்சொல்’ என்ற தலைப்பிலும் கம்ப ராமாயணத்தில் உள்ள தத்துவங்கள் குறித்து பேசினா்.

புலவா் வெள்ளத்துரை, இந்த ஆண்டுக்குரிய கம்பன் பணிச்செல்வா் விருதை ஆசிரியா் க.சுப்பையாவுக்கு வழங்கினாா்.

ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்ளுக்கு நடத்தப்பட்ட

கலை, இலக்கியப் போட்டிகளில் கிருஷ்ணாபுரம் பெருந்தலைவா் காமராஜா் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், சின்மயா வித்யாலயா 3-ஆம் இடமும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாலையில் பாரதி பாஸ்கா் தலைமையில் ‘வசீகரிக்கும் இளைஞா் அங்கதனா, இந்திரஜித்தா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் ராஜ்குமாா், பேராசிரியா் மானசீகன், கவிதா ஜவஹா், பேராசிரியா்கள் விசாலாட்சி, கருணாநிதி, ரேவதி சுப்புலட்சுமி ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT