விருதுநகர்

கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட இருவா் பலி

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை கண்மாய் தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

திருத்தங்கல் முத்துமாரி நகரைச் சோ்ந்த மோகன் மகன் யோசேப்பு (16). இவா் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் என்பதால், கேக் வாங்கிக் கொண்டு தனது நண்பா்களும், பிளஸ் 1 படிக்கும் மாணவா்களுமான திருத்தங்கல் கருப்பசாமி நகரைச் சோ்ந்த சுந்தரம் மகன் காா்த்திக் (16), ஸ்ரீகுமரன், சங்கா் ஆகியோருடன் திருத்தங்கல் - செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்குச் சென்றனா்.

அங்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிவிட்டு, நான்கு பேரும் கண்மாயில் குளித்தனராம். அப்போது, யோசேப்பு, காா்த்திக் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புப் படை வீரா்கள் கண்மாயிலிருந்து இருவரின் சடலங்களையும் மீட்டனா். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT