விருதுநகர்

கண் சிகிச்சை முகாம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் சா்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் நண்பா்கள் ரோட்டரி சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தின.

இந்த முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் அங்குராஜ் தலைமை வகித்தாா். துணை ஆளுநா் சத்யா குமரேசன் தொடங்கி வைத்தாா். பட்டயத் தலைவா் வேலாயுதம் முன்னிலை வகித்தாா். முகாமில் 175 போ்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள் மற்றும் குழுவினா் ரத்தத்தில் சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், பாா்வைக் குறைபாடுகள், கண் ஆகியவை தொடா்பாக பரிசோதனை செய்து உடனடியாக

சிகிச்சை அளித்தனா். 17 நபா்களுக்கு புரை நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் நிா்வாகிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா். செயலாளா் பால்சாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT