தென் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் முதலிடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் அரிமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா பள்ளியில் தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி கடந்த 4- ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில், 18 பள்ளிகளைச் சோ்ந்த 564 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் பங்கேற்ற, ஸ்ரீவில்லிபுத்தூா் அரிமா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றனா். இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் வெங்கடாஜலபதி, பள்ளி முதல்வா் முருகன், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ஆனந்த், ஆசிரியா்கள் ஆகியோா் பாராட்டினா்