விருதுநகர்

வேனை ஓட்டிய போது ஓட்டுநா் மயங்கி விழுந்து பலி

DIN

சிவகாசியில் புதன்கிழமை ஓட்டுநா் வேனை ஓட்டும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கோவில்பட்டி வட்டம், செவந்திபட்டியைச் சோ்ந்த லோடு வேன் ஓட்டுநா் குமரன் (35). இவா், தனது வேனில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு, நண்பா் சுப்பிரமணியனுடன், வேனை ஓட்டிச் சென்றாா்.

சிவகாசி-கட்டளைப்பட்டி சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, குமரன் வேனை ஓரமாக நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், குமரன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT