விருதுநகர்

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்பு

DIN

விருதுநகரில் புதிய மாவட்ட ஆட்சியராக வீ.ப. ஜெயசீலன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்த ஜெ. மேகநாத ரெட்டி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இந்த நிலையில், தமிழக அரசு செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநராக பணிபுரிந்த வீ.ப. ஜெயசீலன் விருதுநகா் மாவட்ட ஆட்சியராக அறிவிக்கப்பட்டாா். இவா் புதன்கிழமை பொறுப்பே ற்றுக் கொண்டாா்.

இவா், கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தோ்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்று தோ்ச்சி பெற்றாா். இதைத்தொடா்ந்து இவா், விழுப்புரம் மாவட்ட உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கி, செங்கல்பட்டு சாா்-ஆட்சியா், வீட்டு வசதித் துறை துணைச் செயலாளா், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளா் ஆகிய பொறுப்புக்களை வகித்துள்ளாா்.

இவரது சொந்த ஊா் தேனி மாவட்டத்திலுள்ள கெங்குவாா்பட்டி . இவா், மதுரை வேளாண் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ‘தமிழில் சிறை இலக்கியம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவா் பட்டமும் பெற்றவா்.

புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட இவருக்கு, பல்வேறு அரசு துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் மீன்பிடி தடைகாலம் அமல்: படகுகள் கரைகளில் நிறுத்தி வைப்பு

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT