விருதுநகரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
விருதுநகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(38). இவா் கூலி வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 3.1.2021-ஆம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இது குறித்து, புகாரின் பேரில் விருதுநகா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ வழக்குப் பதிவு செய்து முருகனைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முருகனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பூா்ண ஜெயஆனந்த் தீா்ப்பளித்தாா். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப் பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.