விருதுநகர்

காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்றவா் கைது

DIN

சிவகாசியில் காவல் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற அச்சுத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி ரிசா்வ்லைன் பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் கணேசன் (59). அச்சுத் தொழிலாளியான இவா் ரூ. 5 லட்சம் வரை கடன் வாங்கி, சூதாடி இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவா்கள் இவரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளனா். இதையடுத்து, சிவகாசி நகா் காவல் நிலையம் முன்பு கணேசன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளாா். போலீஸாா் இவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். இது குறித்து, தலைமைக் காவலா் மாயகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கணேசனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT