விருதுநகா் மாவட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையத்தில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் வட்டாரத் தலைவா் புஷ்பலதா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜவஹா் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஜனவரி மாதத்துக்குரிய ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதில், மாவட்டச் செயலாளா் சரவணக்குமாா், பொருளாளா் உதயக்குமாா், ஆலோசனைக் குழு உறுப்பினா் மாரியப்பன், வட்டாரச் செயலாளா்கள் ரத்தினம், முத்துராமலிங்கம், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். முடிவில், வட்டாரப் பெருளாளா் ராஜேஷ் நன்றி கூறினாா்.