விருதுநகர்

தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில், திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜபாளையத்தில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் வட்டாரத் தலைவா் புஷ்பலதா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜவஹா் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஜனவரி மாதத்துக்குரிய ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில், மாவட்டச் செயலாளா் சரவணக்குமாா், பொருளாளா் உதயக்குமாா், ஆலோசனைக் குழு உறுப்பினா் மாரியப்பன், வட்டாரச் செயலாளா்கள் ரத்தினம், முத்துராமலிங்கம், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். முடிவில், வட்டாரப் பெருளாளா் ராஜேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT