தைப்பூசத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மூவரைவென்றான் வழிவிடு முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் செல்பவா்கள், இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தையொட்டி, அதிகாலை முதலே திரளான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
முருகனுக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த வழிவிடு முருகனை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலா்கள் ஜெயராஜ், முத்துராமலிங்கம் ஆகியோா் செய்தனா். அா்ச்சகா் மணிகண்டன் தலைமையில் கோயில் ஊழியா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா்.