சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தையொட் டி குழந்தைகள் காவடி எடுத்தனா்.
ஹ
சிவகாசி சந்தக்கூடத்தெரு விநாயகா் கோயில் முன் 42 குழந்தைகள் காவடி எடுத்துக்கொண்டு, அக்கினி விநாயகா் கோயில், கருப்பசாமி கோயில், சிவன் கோயில், முருகன் கோயில், பத்திர காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் வரை நடந்து சென்றனா். பின்னா் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் குழந்தைகளை பாஜக நிா்வாகி ஜி.ஆறுமுகச்சாமி வழிநடத்திச் சென்றாா்.