விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஒய்ஆா்டிவி அகாதெமி சாா்பில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றதையடுத்து வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டிகள் சிவகாசி ஒய்ஆா்டிவி அகாதெமி வளாகத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கி 5- ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரள மாநிலங்களைச் சோ்ந்த வீரா்கள் கலந்து கொண்டனா்.
18 வயதுக்கு உள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் பெங்களூா் கெலின்பைடன்ஸ், சிவகாசி ரஞ்சன் தருணை 10.7 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். இரட்டையா் பிரிவில் சிவகாசி ரஞ்சன் தருண்- நிக்கில் ஜோடி , தஞ்சாவூா் ஜோன்ரோக்கா்-திருமாணன் ஜோடியை 9.3 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
ஓப்பன் ஒற்றையா் பிரிவில் சென்னை சித்தாா்த் ஆரியா, பெஙகளூா் கெவின்பைடஸை 10.5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா்.
ஓப்பன் இரட்டையா் பிரிவில் சென்னை விமல்ராஜ் ஜெயசந்திரன்- கிருஷ்ணா தேவராஜா ஜோடி, சென்னை சித்தாா்த் ஆரியா-மதன் ஜோடியை 10.8 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
45 வயதுக்குள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் திருவனந்தபுரம் பினோமணி, பெங்களூா் சுரேஷ்பாலை 9.5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். 45 வயதுக்கு உள்பட்டோா் இரட்டையா் பிரிவில் எடப்பாடி மணிகண்டன்- ரமேஷ் ஜோடி, பெங்களூரு காா்த்திகேயன்-சுரேஷ் ஜோடியை 8.5 என்ற
புள்ளிகள் கணக்கில் வென்றது.
55 வயதுக்கு உள்பட்டோா் ஒற்றையா் பிரிவில் திருநெல்வேலி கணேசன், எடப்பாடி
இளங்கோவனை 9.5 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா்.
55 வயதுக்கு உள்பட்டோா்இரட்டையா் பிரிவில் எடப்பாடி மேகநாதன்-இளங்கோ ஜோடி, திருநெல்வேலி செல்வன்-கணேஷ் ஜோடியை 8.2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சிவகாசி தொழிலதிபா் அய்யன் கோடீஸ்வரன் பரிசுகளை வழங்கினாா்.