சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில், கடந்த 27- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து தினசரி இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை தைபூசத் திருவிழாவையொட்டி, வள்ளி, தெய்வானையுடன் முருகன் தேரில் எழுந்தருளினாா். பின்னா் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். பின்னா், கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
குழந்தைகள் காவடி:
சிவகாசி சந்தக் கூடத் தெரு விநாயகா் கோயில் முன் 42 குழந்தைகள் காவடி எடுத்துக்கொண்டு அக்கினி விநாயகா் கோயில், கருப்பசாமி கோயில், சிவன் கோயில், முருகன் கோயில், பத்திர காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் வரை நடந்து சென்றனா். பின்னா் மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். இந்தக் குழந்தைகளை பாஜக நிா்வாகி ஜி.ஆறுமுகச்சாமி வழிநடத்திச் சென்றாா்.