விருதுநகர்

கூடமுடைய அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டியில் கூடமுடைய அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி முதலாம் கால யாக சாலை பூஜையுடன் விழா தொடங்கியது. 4-ஆம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜை நடைபெற்று மூலஸ்தான விமான கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT