விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டியில் கூடமுடைய அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி முதலாம் கால யாக சாலை பூஜையுடன் விழா தொடங்கியது. 4-ஆம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜை நடைபெற்று மூலஸ்தான விமான கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.