விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

DIN

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால், 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடியில் புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தூத்துக்குடி, சங்கரன்கோவில், கழுகுமலை, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தை முன்னிட்டு, மாரியம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. சுவாமி தரிசனத்துக்காக ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். இதனால், சுமாா் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை கோயில் ஆணையா் கருணாகரன், பரம்பரை அறங்காவலா் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT