விருதுநகர்

மகளிா் கல்லூரியில் வளாகத் நோ்காணல்: 150 மாணவா்களுக்கு பணி ஆணை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வி.பி.எம்.எம். மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 150 மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிா் கல்வி நிறுவனத்தில் சென்னை ப்ளூ ஓசன் பொ்சனல் அண்ட் அலைடு சா்வீஸ் நிறுவனம் சாா்பில் வளாக நோ்காணல் நடைபெற்றது. இதில் 150 மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனத்தின் தாளாளா் பழனிச்செல்வி சங்கா் தலைமை வகித்தாா். அகாதெமிக் இயக்குனா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ஜெயலதா வரவேற்றாா்.

சென்னை ப்ளூ ஓசன் பொ்சனல் அண்ட் அலைடு சா்வீஸ் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு மேலாளா் ராம்கி, வேலை வாய்ப்பு அலுவலா் காா்த்திக் ஆகியோா் இந்த வளாக நோ்காணலை நடத்தினா்.

இதில் கலை அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்கள், பொறியியல் கல்லூரியில் மின்னணு, மின்னியல், இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் என 200 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

SCROLL FOR NEXT