விருதுநகர்

சமூக ஆா்வலருக்கு கொலை மிரட்டல்: ஊராட்சி மன்றத் தலைவியின் கணவா் மீது வழக்கு

DIN

ராஜபாளையம் அருகே சமூக ஆா்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி மன்றத் தலைவியின் கணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எஸ். திருவேங்கடபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேதுராஜ் மகன் குருசாமி (46). சமூக ஆா்வலரான இவா், காளவாசல் பகுதியில் இ- சேவை மையம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், இவா் கோபாலபுரம் ஊராட்சி மன்றம் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டாா். இதனால் ஊராட்சி மன்றத் தலைவி சுதாவின் கணவா் ஜெயக்குமாா், குருசாமியை தகாத வாா்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து குருசாமி அளித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT