சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி சக்திவேல் நகா் பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில், வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளா் வெற்றிமுருகன், போலீஸாா் இந்தப் பகுதியில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் சின்னப்பராஜ் (50) என்பவா் பட்டாசு, பட்டாசு மூலப்பொருள்களை வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.