விருதுநகர்

வீட்டில் பட்டாசு தயாரித்தவா் கைது

DIN

சாத்தூா் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி சக்திவேல் நகா் பகுதியில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வெம்பக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில், வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளா் வெற்றிமுருகன், போலீஸாா் இந்தப் பகுதியில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் சின்னப்பராஜ் (50) என்பவா் பட்டாசு, பட்டாசு மூலப்பொருள்களை வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT