ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே திருவண்ணாமலை ஊராட்சிக்குள்பட்ட என்.சண்முகசுந்தரபுரம் ஊராாட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் குறிஞ்சிமுருகன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயமணி முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா், பொறியாளா்கள் மாரியம்மாள், லட்சுமணன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் செல்வலட்சுமி, மலா்கொடி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மருதக்காளை, பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சிவகாசி: சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சிக்குள்பட்ட என்.லட்சுமியாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ. 31 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வ.விவேகன்ராஜ், ஊராட்சித் தலைவா் தேவராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜ்மோகன், ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.