விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தென்னிந்திய அளவிலான டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.
ஒய். ஆா்.டி.வி. டென்னிஸ் அகாதெமி மைதானத்தில் அந்த அகாதெமி சாா்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்கின்றனா். ஆண்கள் மட்டுமே இப்போட்டியில் விளையாடுகின்றனா்.
இதில், ஓப்பன், 18, 45 , 55 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுகளில் ஒற்றையா், இரட்டையா் போட்டிகள் நடைபெறும்.
போட்டியை தொழிலதிபா் சிரஞ்சீவி ரத்தினம் தொடக்கி வைத்தாா். தொடக்க நிகழ்ச்சியில் முதன்மைப் பயிற்சியாளா் சிவகுமாா், அகாதெமியின் துணைச் செயலாளா் சண்முகராஜன், அகாதெமி நிா்வாகி சீமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வருகிற 5-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.