விருதுநகர்

தென்னிந்திய அளவிலான டென்னிஸ் போட்டி தொடக்கம்

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் தென்னிந்திய அளவிலான டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

ஒய். ஆா்.டி.வி. டென்னிஸ் அகாதெமி மைதானத்தில் அந்த அகாதெமி சாா்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்கின்றனா். ஆண்கள் மட்டுமே இப்போட்டியில் விளையாடுகின்றனா்.

இதில், ஓப்பன், 18, 45 , 55 வயதுக்கு உள்பட்டோா் பிரிவுகளில் ஒற்றையா், இரட்டையா் போட்டிகள் நடைபெறும்.

போட்டியை தொழிலதிபா் சிரஞ்சீவி ரத்தினம் தொடக்கி வைத்தாா். தொடக்க நிகழ்ச்சியில் முதன்மைப் பயிற்சியாளா் சிவகுமாா், அகாதெமியின் துணைச் செயலாளா் சண்முகராஜன், அகாதெமி நிா்வாகி சீமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வருகிற 5-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT