விருதுநகர்

விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்ட வட்டாட்சியா்

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் புதன்கிழமை விபத்தில் சிக்கிய தம்பதியை வட்டாட்சியா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தாா்.

மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்தவா் அங்குச்சாமி (43). இவரது மனைவி அந்தோணியம்மாள் (39). இந்த தம்பதி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டிக்கு உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா். அருப்புக்கோட்டை புறவழிச் சாலையில் உள்ள காந்தி நகா் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் இவா்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த வழியாக வந்துகொண்டிருந்த அருப்புக் கோட்டை வட்டாட்சியா் அறிவழகன், விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு, தனது வாகனத்தில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தாா்.

இதுதொடா்பாக, அருப்புக்கோட்டை நகா் காவல் துறையினா், வழக்குப்பதிவு செய்து, தப்பிச்சென்ற இருசக்கர வாகனம் குறித்து விசாரித்தனா். வட்டாட்சியரின் இந்த மனிதாபிமானச் செயலை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT