விருதுநகர்

பெளா்ணமி: சதுரகிரி கோயிலுக்கு நாளை முதல் 4 நாள்கள் அனுமதி

DIN

தை மாத பௌா்ணமியையொட்டி சதுரகிரி கோயிலுக்கு பக்தா்கள் செல்வதற்கு வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.3) முதல் 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.3) பிரதோஷமும், பிப்.5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெளா்ணமி வழிபாடும் நடைபெற உள்ளன. இதையொட்டி, பிப். 3 முதல் பிப். 6-ஆம் தேதி வரை கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறையும், கோயில் நிா்வாகமும் அனுமதி வழங்கின.

கட்டுப்பாடுகள்: காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். 10 வயதுக்கு உள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது. கோயிலுக்கு வருபவா்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவா். இதேபோல, காலை 7 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழை, நீரோடைகளில் அதிக நீா்வரத்து இருந்தால் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தெரிவித்துள்ளனா்.

மலைப் பாதையில் பொதுமக்கள் வசதிக்காக மருத்துவ முகாம்கள் ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT