விருதுநகா் மாவட்ட அளவில் சிவாலயங்களில் பணிபுரியும் அா்ச்சகா்கள், ஓதுவாா்களுக்கு சைவ ஆகம புத்தொளி பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.
ஸ்ரீவில்லிபுத்தூா் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சைவ ஆகம புத்தொளி பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் வளா்மதி தலைமை வகித்துத் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் ஜவகா், ஆலய ஊழியா்கள் கலந்து கொண்டனா். 6 வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளில் விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்களில் பணிபுரியும் ஓதுவாா்கள், அா்ச்சகா்கள் 52 போ் கலந்து கொண்டனா்.
ஆன்மிகப் பேச்சாளா் முத்துசாமி, புலவா் பாலகிருஷ்ணன், கோயில் அா்ச்சகா்கள் ரகு பட்டா், பாலாஜி பட்டா் ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.