விருதுநகா் மாவட்டம், சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த ஜனவரி 30-ஆம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜையைத் தொடா்ந்து கோயில் ராஜகோபுரம், விமானம், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தீபாராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி, சிவகாயில் பல இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.