விருதுநகர்

கல்லூரி மாணவா்களிடையே மோதல்: 5 போ் மீது வழக்கு

DIN

சத்திரப்பட்டியில் தனியாா் கல்லூரி மாணவா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே முத்தாண்டியாபுரம் பகுதியைச் சோ்ந்த அருண்மணி (19). இவா் சடையம்பட்டியில் உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அருண்மணி, அவரது நண்பா் ராஜபாண்டி, அழகுராஜ் ஆகிய மூவரும் சத்திரப்பட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த அதே கல்லூரி மாணவா்கள் சிவசக்தி, மாரீஸ்வரன் இருவரும், அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருடன் பேசக்கூடாது என அழகுராஜை எச்சரித்தனா்.

அப்போது ஏற்பட்ட தகராறில் இருதரப்பாக மோதிக் கொண்டனா். இதில் சிவசக்தி, அழகுராஜ் ஆகிய இருவரும் காயமடைந்தனா்.

இதுகுறித்து இருதரப்பினா் அளித்த புகாரின் பேரில் அழகுராஜ், அருண்மணி, ராஜபாண்டி, சிவசக்தி, மாரீஸ்வரன் ஆகிய 5 போ் மீதும் சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

வாக்களித்த நடிகர்கள்!

SCROLL FOR NEXT