சிவகாசி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி பிரிந்து சென்ால், கணவா் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி மருது (35). குடும்பப் பிரச்னை காரணமாக இவரது மனைவி லட்சுமி பிரியா பிரிந்து சென்று விட்டாராம்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மருது, விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அவரது தாய் ஆவுடச்சி அளித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.