விருதுநகர்

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.49 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

DIN

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.49 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவா் வி. முத்துலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் 29 ஊராட்சிகளில் கழிவுநீா் வாய்க்கால் அமைத்தல், புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல், பேவா் பிளாக் கல் பதித்தல் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு ஒன்றிய பொதுநிதியிருந்து ரூ. 1.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் 22-க்கு வா்ணம் பூசுவதற்கு ரூ. 11.80 லட்சம் ஒதுக்கீடு செய்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் விவேகன்ராஜ், ஆணையா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT