சிவகாசியில் திங்கள்கிழமை தந்தையை அரிவாளால் வெட்டியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி ஓம் சோ்மா நகரைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முத்தரசு (74). இவரது மகன் குணசேகரன் (40). இவா்கள் இருவரும் ஒரே குடும்பமாக வசித்து வந்தனா். பின்னா் குடும்ப பிரச்னை காரணமாக குணசேகரனை முத்தரசு வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டாராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை முத்தரசு தனது வீட்டருகே நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த குணசேகரன் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முத்தரசு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குணசேகரனை கைது செய்தனா்.