சிவகாசியில் லாரி ஷெட் உரிமையாளா் வீட்டில் 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.75 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி கருமன் கோயில் சாலை பராசக்தி நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (63). இவா் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறாா். இவா் தனது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூா் சென்றுவிட்டு, திங்கள்கிழமை அதிகாலை திரும்பி வந்துள்ளாா்.
அப்போது, வீட்டில் படுக்கையறையில் உள்ள பீரோ, மாடி அறையில் உள்ள பீரோ ஆகியவை உடைக்கப்பட்டு அதிலிருலிந்த 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.75 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வீட்டின் சுற்றுச் சுவா் ஏறிக் குதித்து, பின்பக்கம் உள்ள கதவை உடைத்து வீட்டினுள் மா்ம நபா்கள் புகுந்தது தெரியவந்தது. மோப்பநாய் வரழைக்கப்பட்டது. அது சுமாா் ஒரு கி.மீ. தூரம் ஓடிவிட்டு திரும்பி வந்துவிட்டது. கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.