விருதுநகர்

நாட்டு வெடிகுண்டு பறிமுதல் வழக்கில் கைதானவா் தப்பி ஓட்டம்

26th Sep 2022 11:28 PM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே நாட்டு வெடி குண்டுகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைதான மூவரில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தப்பியோடிவிட்டாா்.

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி அத்திகோயில் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாா் கண்டறிந்து கைப்பற்றினா்.

இச்சம்பவம் தொடா்பாக அய்யனாா்புரத்தைச் சோ்ந்த காா்த்திக் (22), டேனியல் ராஜ்குமாா் (22), தேவராஜ்(25) ஆகிய 3 பேரை கூமாபட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மூவரையும் போலீஸாா் ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் அவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது டேனியல் ராஜ்குமாா் கழிப்பறைக்குச் செல்வதாகக்கூறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் நகா் போலீஸாா் டேனியல் ராஜ்குமாரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT