வத்திராயிருப்பு அருகே பெட்டிக் கடைக்கு போதைப் பாக்குகளை விநியோகித்ததாக பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.
வத்திராயிருப்பு அருகேயுள்ள சீலநாயக்கன்பட்டி பிரதானச் சாலையில் உள்ள பெட்டிக்கடையில், மாரீஸ்வரி என்பவா் ஒரு பையில் சில பொருள்களை வைத்து கொடுத்து கொண்டிருந்தாா். அப்போது நத்தம்பட்டி காவல் சாா்பு- ஆய்வாளா் ராஜு விரைந்து சென்று மாரீஸ்வரியை பிடிக்க முயன்ற போது அவா் தப்பி ஓடி விட்டாா்.
இதன்பின் அவா் கடையில் கொடுத்த பையில் போதைப் பாக்கும், ரூ.7,490-ம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து மாரீஸ்வரியைத் தேடி வருகின்றனா்.